காதல் கவிதைகள்

1.முத்தம் கேட்டால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?


2துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது 
என் இதயத்திற்கு!

3.மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை

4.மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!

5.விடுதலை பெற்ற பின்னும் 
சிறை செல்ல துடித்தன 
என் உதடுகள்.

6.கண்ணாடி முன் கொட்டிய வார்த்தைகள்
உன் கண்ணைப்பார்த்ததும் உறைந்தது
ஏனோ!

7.என் முடிவு உன் முடிவில் தான்
இருக்கிறது, நீ முடியாத வரை 
நானும் முடிய மாட்டேன்.


8.உன் ஒற்றைப்பார்வையில் 
தொலைத்து விட்டேன்
நான் என்னை!


9.உன்னைப்பிரிவதும் 
உயிரைப்பிரிவதும் 
ஒன்று தான்!


10.உன்னை அழகானவள் என்று 
கூறியதற்காகவா என்னை
அழ வைத்துப்பார்க்கிறாய்!
       

0 Responses

முகப்புத்தக விருப்பு