தத்துவ ஞானி சாக்ரடீஸ்













கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.
கிரேக்க நாட்டின் த்த்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.
சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.
எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.
பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.
ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.
ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.
பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.
இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.
அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.
இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.
சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,
“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.
சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…
அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.
இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.
சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.
மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.
அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.
“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.
அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.
சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.
நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.
அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன்
கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.
விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.
“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.
சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!
தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.
அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

அலைபாயுதே கண்ணா










அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

நிலைபெயறாது சிலைபோலவே நின்று (2)
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ

தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே (2)
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே (2)
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே (2)
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா (2)
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா (2)
கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ (2)
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ (2)
குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

கண்ணதாசன் கவிதை


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்
!

காதல் கவிதைகள்


1.என்னை நினைவுபடுத்தும் ஒரு பொருளை
உனக்கு பரிசளிக்க நினைத்தேன்
என்னையே தந்தாலும்
அது சாத்தியம் இல்லை அன்பே..

2.காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால்....

3.உச்சரிக்கப்படாத வார்த்தைக்குள்
ஒளிந்து கிடக்கிறது காதல்....

4.என்ன வேண்டும் சொல் வாங்கித்தருகிறேன்
என்னை விற்றாவது...

5.நீ பார்த்த பார்வையில்
பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்
எரிந்து கொண்டே இருப்பேன்......
திரும்பி நீ வந்து
அணைக்கும் வரை

6.தேவையான பல விடயங்களை
மறந்து போகிறேன்
நான்......
உனது நினைவுகளை தவிர.......

7.எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்து விட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.
கவனித்துக்கொள் அன்பே !
அவை உன்னுடைய
காற்செருப்புகள் அல்ல......
கால்கள்



ஹெலன் கெல்லர் (Helen Keller)


ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர்அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887ஆம் வருடம், ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அவர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். அங்கே ஆன் சல்லிவன் என்ற பெண்ணை கெல்லரின் ஆசிரியராக நியமித்தனர். அடுத்த 49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1904ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். 1900ஆம் வருடம், ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து 1904 ஆம் வருடம் பட்டம் பெற்றார். கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத, கண்பார்வையற்ற மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹெலன் கெல்லர், ஊனமுற்றோர் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.
ஹெலன் கெல்லர், 1968ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள், தன் 87ஆம் வயதில் இறந்தார்

பொன்மொழிகள்


1.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.-அப்ரஹாம் லிங்கன்

2.மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்

3.புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
- பிலிப் குறொஸ்பி

4.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்

5.புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்

6.எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.
- எமர்சன்
உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.
- எலனொர் றூஸ்வெல்ற்

7.எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.
- நதானியல் பிராண்டன்

8.கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்என்பதை ஒரு போதும் அறிய முடியாது.
- நெப்போலியன் ஹில்



இன்பத் தமிழ்


தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.

இதயம் கொடு என வரம் கேட்டேன்


முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
ஓஹோ முழுமதி…

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே
ஓஹோ முழுமதி….

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓஹோ முழுமதி

கல்லும் சிலையும்


நடமாட்டம் குறைந்த
மாபெரும் நகரின் கடைத்தெரு!
வருவோர் போவார் எல்லோர்க்கும்
இடைஞ்சலாய் கிடந்தது ஒரு பாறாங்கல்!
யாராவது இக்கல்லை எடுத்துப் போக மாட்டார்களா
என்பதே கடைக்காரர் விருப்பம் - அவர்
விருப்பம் நிறைவேற்றிடவே வந்தார்
வழிப்போக்கர் ஒருவர் கடையருகில்!
“ஐயா! இக்கல்லை எனக்குக் கொடுத்து உதவுகிறீரா?”
வழிப்போக்கர் வினவினார் கடைக்காரரிடம்.
மனமகிழ்வுடன் தலையசைத்தார் கடைக்காரர்
விருப்பம் நிறைவேறுதலை யார்தான் மறுப்பார்?
தெருவில் கிடந்த பாறாங்கல்லைத்
தொட்டு வணங்கி எடுத்துப்போனார் வழிப்போக்கர்.
ஆறுமாதம் தவமும் உழைப்பும் தொடர்ந்தது.
அழகிய சிலை ஒன்று உருவானது!
அற்புத அழகுடன் சிலை வடித்த
அந்த வழிப்போக்கர் - சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ!
மனதில் நினைத்தாலே கரம் குவியும் - அம்
மகானின் சிலை வடிவம் - இயேசு பெருமான்!
இயேசு பெருமான் சிலை காட்சிக்கு வந்தது
இதயத்துடிப்புடன் போட்டி நடந்தது - சிலை வாங்கிட!
இறுதியில் கடைக்காரர் வென்றார் - அதிக விலையை
ஈந்து இயேசு பெருமான் சிலையை வாங்கினார்!
சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவிடம் கடைக்காரர்
சிரம் தாழ்ந்து கேட்டார் - இச்சிலை
வடிக்க மூலக்கல் எங்கேயிருந்தது பெற்றீர்?
வணங்கிச் சொன்னார் சிற்பி நடந்தவற்றை!
கடைக்காரர் பார்வையில் பாறாங்கல் - தடைக்கல்
சிற்பியின் பார்வையில் பாறாங்கல் - சிலை!
மூலப்பொருள் ஒன்றுதான்; பார்வைதான் வேறு
முக்கியம் இங்கே மனதின் பார்வைதான்!
பார்வை மாறினால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பரிசுகள் குவியும்;
அகமாற்றம் அற்புதம் விளைவிக்கும் - கல்லும்
அற்புதச் சிலையாகும் அல்லவா?
புற மாற்றம் தற்காலிகம் - என்றும்
அக மாற்றமே நிரந்தரம்! - கல்லும்
சிலையாகும் - இதனால் பொன்னும் பொருளும்
சிறப்பும் மகிழ்வும் சேர்ந்தேவரும் - உண்மை!

காதல் கவிதைகள்


1.உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

2.இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

3.நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

4.நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!

5.விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.

6.நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

7.உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று
!

பில் கேட்ஸ்


வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

சிறு வயது வாழ்க்கை
வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாயிந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.


இளமை
பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு 1973ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிகு தேவாயான மென்பொருள்களை எழுத துவங்கினர். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தரலானது. இவருடைய தலைமயில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.

பாரதி கவிதைகள்


1.வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.








2.இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.















3.விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;



4.தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!!



5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ





6.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள்


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!

கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!

ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!

இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!

நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.

வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!

பெண் விடுதலை! ஒரு புதிய பார்வை…பாதை


பெண் விடுதலை சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு இன்றைய உலகில் அதிகரித்துவருவது முன்னேற்றமான விடயம். குறிப்பாக ஆண்களும் கடந்தகால ஆண்மைத் தன்மையின் இயல்புகளின் தவறுகளையும் அதன் பெண்ணீய எதிர்ப்புணர்வையும் புரிந்து கொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் முயற்சிக்கும் முக்கியமான காலகட்டம் இது. ஆகவே சமூக அரசியல் தளங்களில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும்; பெண்கள் பெண்ணீயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. காரணம் கடந்தகாலங்களில் சமய நிறுவனங்கள் பெண்ணை பெண்மையை அடக்கி ஒடுக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது வெளிப்படையான உண்மை.
சமய நிறுவனங்களிலிருந்து ஆன்மிக செயற்பாட்டை பிரித்து எடுத்து தனித்து நிறுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஏனனில் ஆன்மீகம் தனிநபர் சுதந்திரம் விடுதலை தனித்தன்மை சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பாதை இது. ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

உண்மையில் பெண்ணீய பிரச்சனை என்பது தவறான ஒரு ஆரம்பம்.
பிரச்சனை ஆண்களினதே. அவர்களது மன உளவியல் சார்ந்த தாழ்வுச்சிக்கலில் உருவானதே பெண் அடிமைத்தனம். ஆகவே அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்கள் குணமடையும் பொழுது பெண்களைப் புரிந்துகொள்வார்கள். மதிப்பார்கள். பெண்கள் தம் இயல்பை பெண்மையை பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் விதைத்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தம் ஆழ் மனங்களிலிருந்து வேரோடு வெட்டி எறியவேண்டும்.

பெண்மையின் சக்தி கண்டு பயந்த ஆரம்ப கால மனிதர் பெண்மையின் இயல்புகளை பண்புகளை குற்றம் கூறி குறை கண்டனர். அதனை வெளிப்படுத்தாதவாறு வரைமுறைகளை அமைத்து அடக்கினர். மீறி வெளிப்படுத்தியவர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டித்தனர், தண்டித்தனர். கீழ்தரமாகவும் தாழ்நிலையிலும் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட
னர். இது பெண்களின் இரத்தத்திலும் எலும்புகளிலும் நன்றாக ஊடுருவியுள்ளது. ஆண்களின் குறிப்பாக ஆண்தன்மையின் இயல்புகளும் பண்புகளும் பெண்களினதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் முடியும் என்பது ஆண்களிடம் தாம் அவர்களைவிட குறைந்தவர்கள் என்ற தாழ்வுச் சிக்கலையும் இயலாமை உணர்வையும் உருவாக்கிவிட்டது. குறிப்பாக பெண்கள் குழந்தைகளைப் பெறுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காம இன்ப (orgasm) உணர்வை அடுத்தடுத்து இயல்பாகப் பெறுவதும் ஆண்களால் முடியாத ஒன்று. இதுவும் ஆண்களிடம் தாழ்வுச்சிக்கலை உருவாக்கியது. தாம் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கு பெண்களை தம் உடலற்பலம் கொண்டு அடக்குவதையும் அவர்களது பண்புகளையும் இயல்புகளையும் சட்டங்கள் இயற்றிக் கண்டித்தனர். இவ்வாறு மிகப் பலமாக இருந்த பெண்ணை பெண்மையை பல்லாயிரம் ஆண்டுகளாக “பெண் பலகீனமானவள்”எனக் கூறி பெண்ணினது அடி மன ஆழத்தில் இக் கருத்தியலைப் புதைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல ஆயிரம் பெண்கள் பேரின்பத்தின் ஒரு பகுதியான சிற்றின்பம் (orgasm) என்ன என்பது தெரியாமலே தாமும் அதற்கு தகுதியானவர்கள் அனுபவிக்கக் கூடியவர்கள் என்பதை அறியாமல் வாழ்ந்து இறந்திருக்கின்றனர். ஆண்களால் தொடர்ச்சியாக இன்பத்தை வழங்க முடியாததாலும், பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) என்னவென்று தெரியுமாயின் ஆணால் ஒரு முறைகூட பெண்ணை திருப்தி செய்யமுடியாது என்பதை பெண் கண்டு பிடித்துவிடுவாள் என்பதாலும் பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) கிடைக்காதவாறு அது என்னவென்று அறிய முடியாதவாறு பெண்களை அடக்கி ஒடுக்கினர். தடைகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினர் ஆண்கள்.

இந்த நூற்றாண்டிலையே காம புணர்வில் இருக்கும் பொழுது உருவாகும் குறிப்பான இன்பம் (orgasm) அடையாளங் காணப்பட்டது. இந்த இன்பம் தொடர்பாக கிழக்கிலோ மேற்கிலோ எந்தவிதமான பாலியல் நூல்களிலும் அதுவரை குறிப்பிடவில்லை. இது மிகவும் முரண்பாடானது.

ஆண்களுக்கு பெண்கள் என்றும் கவர்ச்சியாக இருக்கின்றனர். அழகாகவும் இருக்கின்றனர். ஆகவே பெண்களிடம் காதலில் விழுகின்றனர். பெண் ஆணிண் போதையாகின்றாள். இங்கு மேலும்; பிரச்சனை ஆரம்பிக்கின்றது. பெண்களிடம் தாம் தங்கியிருக்கின்றோம் என்பது ஆணால் சகிக்கமுடியாததாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மனதைத் துன்புறுத்துகின்றது. ஆண்களின் இந்த உணர்வானது பெண்களை மேலும் அடிமைப் படுத்துவதற்கு வழிகோலியது. மேலும் பெண் அழகாக இருப்பது ஆணுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது. காரணம் ஒரு ஆணுக்கு மட்டும் பெண் அழகாக இருக்கமுடியாது அவளைப் பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் அவள் அழகாக இருப்பாள். இது அவளுடன் தொடர்பு கொள்ளவும் உறவை ஏற்படுத்தவும் வழியமைக்கின்றது. ஆணாதிக்க மனதில் அவனது தன்முனைப்புக்கு இது பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான போக்கு அடக்குமுறை நாடுகளுக்கு தேசங்களுக்கு பண்பாடுகளுக்கு கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் பொதுவானதாக இருந்திருக்கின்றது. ஏனனில் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் மனோபாவம் தான் பெரியவன் பலசாலி புத்திசாலி திறமைசாலி என தன் தாழ்வுச்சிக்கலால் நிறுபிக்க வேண்டிய உறுதி செய்யவேண்டிய மனப்பான்மை இருக்கின்றது. நாம் ஒன்றை நிறுபிக்க முற்படுகின்றோமாயின் நாம் அவ்வாறு இல்லை என்பதானால் தான். உண்மையிலையே உயர்ந்தவருக்கு தன்னை நிறுபிக்கவேண்டிய தேவையில்லை. சாட்சிகளோ காரணங்களோ தேவையில்லை. ஒருவர் எல்லாவற்றிலும் உயர்ந்தவரர் எனின் குறைந்த புத்தியுள்ளவரால் கூட அடையாளம் காணமுடியும். ஏனனில் அவரிடம் அந்த காந்த சக்தி இருக்கும். பெண்ணை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்காக பெண்ணை ஒரு உப மனித இனமாகவே ஆண் அடையாளப்படுத்தினான். தனக்கு சரிசமமானவள் எனக் கருதியதில்லை.

இயற்கை மிகவும் சக்திவாய்ந்தது. புத்திக் கூர்மையானது.(intelligent) இதனால் தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வௌ;வேறு பண்புகளையும் இயல்புகளையும் படைத்துள்ளது. ஓவ்வொரு பண்புக்கும் இயல்புகளுக்கும் ஒவ்வொருவிதமான பொறுப்புக்கள் வாழ்க்கையில் உண்டு. எந்த ஒரு இயல்போ பண்போ ஒன்றைவிட ஒன்று குறைந்ததுமல்ல கூடியதுமல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. இதைப் புரிந்துகொண்டு நம் பணிகளையும் பொறுப்புக்களையும் முழுமையுடன் செய்யும் பொழுது வாழ்வு மட்டுமல்ல ஒவ்வொரு கணமும் நிறைவு பெற்று ஆனந்த மயமாக இருக்கின்றது. ஆணுக்கு நிகராய் பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பங்குபெற வேண்டும். ஆண்கள் (ஆண் தன்மை போக்கு) மட்டும் பங்கு பெறுவதனாலையே யுத்தங்களும் ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாத பூச்சாண்டிகளும் ஆயுத உற்பத்திகளும் நடைபெறுகின்றன. வாழ்க்கiயில் அழகியல் என்பது பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகிவிட்டது.

பெண் விடுதலை முன்னணி உருவாக்கப்பட வேண்டும் ஆனால் அது எதிர்ப்புணர்வின் அடிப்படையிலோ கோவத்திலோ வெறுப்பிலோ உருவானதாக இருக்கக்கூடாது. மாறாக புரிந்துணர்வின் அடிப்படையிலும் அன்பு காதல் என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.இன்றைய பெண்விடுதலைப் போராட்டம் பிரங்க்ஞையற்ற ஆண்களுக்கு எதிரானதாக எதிர்விளைவாகவே இருக்கின்றது. இது மாறவேண்டும். கடந்த காலங்களிலிருந்து அடக்கியாளும் ஆண்கள் தாம் என்ன செய்கின்றோம் என்ற சுய பிரங்க்ஞை இன்றியே பெண்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களது மனதில் வேருண்டப்பட்ட கருத்துக்களில் இருந்தே செயற்பட்டனர். நாம் புரட்சி செய்ய வேண்டியது கடந்த காலத்திற்கு,! கடந்தகால ஆதிக்கத்திற்கு எதிராகவே! ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராகவே! போராட்டம் நடைபெறவேண்டும்.

ஆண்கள் களைத்து தோற்றுப்போனார்கள்!
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஐயாயிரம் யுத்தங்களை நடாத்தியிருக்கின்றார்கள். இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான காலமே அமைதியான சமாதான நாட்கள். உண்மையாக இவை அடுத்த யுத்தத்திற்கான தயாரிப்பு நாட்களே. ஆண்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் போதும்.

இனிவரும் காலம் பெண்களின் காலம் என்பதே என் பார்வை. இது பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்யையையம் ஒளியும் வழியும் தரும் என ஓசோ கூறுகின்றார்.


ஓசோவின் பெண் விடுதலை! புதிய பார்வை என்ற புத்தகம் மேலும் பல விரிவான விளக்கங்களைத் தருகின்றது

புதிய வாழ்க்கை முறையை நோக்கிய பயணிப்போம்


ஆறு மணித்தியலாம் வேலை
ஆறு மணித்தியலாம் நித்திரை
ஆறு மணித்தியலாம் தயாரிப்புகள்
ஆறு மணித்தியாலம் ஆடல் பாடல் கொண்டாட்டம்

வைத்தியர் நோய் வரும் முன் காப்பாற்றவேண்டும்.
அதற்கே அவருக்கு ஊதியம் வழங்கவேண்டும்.
வந்த நோயை குணப்படுத்துவதற்கல்ல.
நோய் மனிதர்;களுக்கு வருகின்றது எனில்
மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிகாட்டப்படவில்லை.

வாழ்க்கையை நாம் வாழ்கின்றோமா?
இது நாம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய முக்கியமான ஒரு கேள்வி.
இதற்கு வாழ்க்கை என்பது என்ன என்று தெரிந்திருக்கவேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொன்றையும் முழுமையாகவும் ஆனந்தமாகவும்
செய்யும் பொழுது வாழ்க்கை முழுமையடைகின்றது.
எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பது முக்கியமல்ல
எப்படி வாழ்கின்றோம்; என்பதே முக்கியமானது.

காலை எழும் பொழுது நம் முகத்தை பார்ப்பதற்கு
நமக்கே விருப்பம் இருக்காது.
ஏன்?
இன்னும் சிறிது நித்திரை கொள்ள வேண்டும் என்ற அவா?
கடைசி நிமிடம் வரை நித்திரை கொண்டு அவசர அவசரமாக எழும்பி இயந்திரமாக
அனைத்து வேலைகளையும் செய்து காலை உணவை உண்பதல்ல என்னவென்றே தெரியாமல் வயிற்றில் அடைவது அல்லது வேலைக்கும் போகும் வழியில் அடைவது. பிற குடும்ப உறவுகளுடன் எரிச்சலடைவது அவர்களும் தங்களது எரிச்சலை கொட்டுவது. எரிச்சல்கள் அதிகமாகி ஒரு காலைச் சண்டை..
வீட்டில்
நாட்டில்?

வேலைக்கு ஏன் அவசரம்
செய்யும் வேலையில் விருப்பமா?
அல்லது கடமை உணர்வா?
ஓன்றும் இல்லை.
குறிப்பிட்ட நேரத்திற்கு நிற்காவிட்டால்
சம்பளம் வெட்டுப்படும்.
பணத்தைக் காப்பாற்ற நம்மை மறந்து ஒடுகின்றோம்.
வேலையில் முழுமையாக ஈடுபடுகின்றோமா? இல்லை
திங்கட் கிழமை ஏன் வருகின்றது என
ஞாயிறு மாலை எரிச்சலடைவோம்.
திங்கள் வந்தவுடன் வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் என ஏங்குவோம்.
எதிர்கால கனவே நிகழ்கால வாழ்க்கையாகின்றது.
நிகழ்காலம் இதனால் மறக்கப்பட்டுவிடுகின்றது
ஆகவே வாழ்க்கை வாழாமல் விடப்படுகின்றது.
எப்பொழுதும் வாழ்க்கை இக் கணமே.
என்பது நம் பிரக்ஞையற்ற மனதிற்குப் புரிவதில்லை.

எதிலும் ஈடுபாடு இல்லாமல்
இயந்திரமாக அலுப்புடன் வாழ்கின்றோம்.
ஏன்?
நம் வாழ்க்கையை நாம் தீர்மானிப்பதில்லை.
ஒருவர் பிறந்தவுடன்
அவரது முழுச் சுதந்திரத்தையும்
பெற்றோர் எடுத்துக்கொள்கின்றனர்.
அவர்களே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றனர்.
இதன் பின் சமய நிறுவனங்களும்
பாடசாலைகளும் வழிநடத்துகின்றன.
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்
எப்படி வாழ வேண்டும் என்ன படிக்கவேண்டும்
என்பதைத் தீர்மானிக்கினறன.
படித்தவுடன் வேலை திருமணம் குடும்பம் குழந்தை என
வாழ்க்கைச் சக்கரம் மீண்டும் மீண்டும்
ஒரேமாதிரி உருண்டோடுகின்றது.
.
இதில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
ஒருவரின் விருப்பு வெறுப்புகள் திறமைகள் ஆளுமைகள் ஆற்றல்கள் பலம் பலவீனங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
இதன் விளைவுகள் தனிநபருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
இதற்கு தொடர்ச்சி ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் நம் மனதில் ஏற்படும் பாதிப்புகள் பிற மனிதரையும் பாதிக்கும்.
இதனால் தான் பொதுவான உலக வாழ்க்கை
எல்லா நாடுகளிலும் ஓரே மாதிரி இருக்கின்றது.
எல்லோரும் திருப்தியின்றியே வாழ்கின்றனர்.
இதற்கு அடிப்படையாக ஒரு காரணம்
எங்கோ இருக்கவேண்டும். இதைக் கண்டுபிடித்து
இந்த நிலையை மாற்றி நாம் விரும்பியபடி வாழ்வதற்கு
நாம் தான் முயற்சிக்கவேண்டும்.
முதல் படி எடுத்துவைக்கவேண்டும்.
ஆனால் முதல் படி எடுத்துவைப்பதில்
எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கின்றது.
காரணம் பொறுப்பு (responsibility).
ஒருவருக்கும் பொறுப்பு எடுப்பதற்கு விருப்பமில்லை.
ஆனால் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரமும் பொறுப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதற்கோ புரிந்துகொள்வதற்கோ
நாம் தயார் இல்லை.

ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாகவும்
முழுமையாகவும் வாழ்வோமானால்
அடுத்த கணமும் அவ்வாறே அமையும்.
ஏனனில் இக் கணத்தின் தொடர்ச்சியே அடுத்த கணம்.
இவ்வாறு வாழ்ந்தோமானால்
எதிர்காலத்தை பற்றிக் கனவு மட்டும் காணமல்
எதிர்காலம் நிகழ்காலமாக வரும் ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையை அனுபவிக்கலாம் ஆனந்தமாக.

ஒரு மனிதருடன் காதலாகவும் அன்பாகவும் இருக்கும் பொழுது
மகிழ்ச்சி பிறக்கின்றது எனில்
இவ்வாறு ஒவ்வொரு மனிதருடனும்
காதலாகவும் அன்பாகவும் இருக்கும் பொழுது
அனைவரும் ஆனந்தமாக இருக்கலாம்.
ஆடுவதும் பாடுவதும் சிரிப்பதும்; என
வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக மாறும்.

ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்


எவ்வளவோ விசயங்கள் மனதில் வைத்திருந்தேன்; ஆனாலும் ஒன்றிலும் அல்லது அதிகப்பட்ச வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தமோ ஆதங்கமோ உங்களுக்குள் உள்ளது என்றால் இந்த கீழ்க் கண்ட கேள்வியை உங்களை நோக்கி கேட்கத் தகுதிபெற்று இருக்கிறீர்கள் அல்லது கேள்வி கேட்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘நான் ஆர்வத்துடன் என் எண்ணங்களை செயல்படுத்தினேன் அல்லது செயல்படுத்துகிறேன் என்பது உண்மையா?

கேள்விக்கு முன்னே உள்ள வரிகள் அனுபவமாக இருந்தால் நிச்சயம் கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்றுதான் இருக்கும். மனதில் ஆர்வம் ஆழமாக வேரூன்றினால் நிச்சயமாக ‘வெற்றி’ விசுவரூபமாகத்தான் வெளிப்படும். நன்றாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறு ஒரு போதும் வெற்றியின் ஆரம்பத்தை அசைப்பதுவுமில்லை தடை போடுவதுமில்லை; ஆர்வமின்மைதான் வெற்றியின் ஆரம்பத்தை அழித்துவிடுகிறது. ஆதி இல்லாமல் அந்தம் ஏது? சில உண்மை நனவுகளை நினைவு கொள்ளுங்கள். ஆர்வம் எப்படி வெற்றியின் ஆரம்ப ஆதாரமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாக புரியும்.

மனிதனாகப் பிறந்தேன் வாழத்தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தது. கோடிக்கணக் கான மனிதர்களை போல நானும் வாழ்க்கை பயணத்தை கடத்துவேன் என்ற எண்ண மில்லாமல் என்னை ஏற்றுக்கொண்ட இந்த உலகத்திற்கு எதையாவது செய்வேன் என்றுகூட நினைக்காமல் இதை கண்டுபிடிப்பேன் என்றஆழ்ந்த ஆர்வத்துடன் ஒருவர் செயல்படுத்த முனைந்தார். வெற்றியும் பெற்றார் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்களின் ஆர்வம் எத்தனை கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பமாக இருந்து இன்றும் பிகாசித்துக்கொண்டு இருக்கின்றன.

எனக்கு எதற்கு இந்த வேண்டாத முயற்சி என்று நினைக்காமல் ஒருவர் நடந்தார்… ஏறினார்… ஏறினார்… பூமியின் உச்ச உயரத்திற்கே. ஆமாம், நண்பர்களே! பீட்டர் ஹேப்பர் என்ற ஆஸ்திரேலியர் முதன் முதலில் ஆக்சிஜன் குடுவை இல்லாமலே எவரெஸ்ட் சிகரம் ஏறினார் என்றால், அந்த வெற்றி அவரின் ஆர்வத்தினால் விளைந்தது தானே.

தத்தி தத்தி இந்த உலகில் நடக்க முயற்சி செய்த ஒரு குழந்தை மனிதனாக வளர்ந்த பிறகு மனிதனின் மகத்தான காலடி இதுதான் என்று நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் ஆர்வத்தில் உருவானதுதான் மாபெரும் சரித்திர விஞ்ஞான சாதனை.

நான் இதைச் செய்வேன் என்று வீட்டை விட்டு ஒரு பெண்மணி போக லாமா? முடியுமா? என்ற விவாதம் இப்போது கூட இருக்கத்தான் செய்கிறது. ஆர்வம் ஒரு பெண்மணியைத் தூண்டியது. கடைக்குச் சென்று கத்தரிக்காய் வாங்க அல்ல கடல்மார்க்கமாக தன்னந்தனியாக உலகைச் சுற்றிப் பயணித்தார் என்பது ஆர்வத்தின் வலிமை தானே.

போர் என்றால் பலவகை படைகள், வீரர்கள், கத்தி, கூர்வேள், துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களுடன் மட்டுந்தான் வெற்றி பெற முடியும் என்றகருத்தை தூள்தூளாக்கினார் ஒருவர். அந்த மனிதனின் அறப்போர் ஆர்வம் உலகை வியக்கத்தில் ஆழ்த்தியது. வெற்றி பெற்றார். அவர் மகாத்மா ஆவார். ஆமாம், அறப்போரில் நாம் சுதந்திரம் பெறமுடிந்தது.

பார்க்கவே முடியாத ஒருவரால் இயற்கை அழகை பார்க்க முடிந்த, நம்மை ரசிக்க தூண்டும் வகையில் கவிதையில் தன் கற்பனையில் விவரிக்க முடிந்தது கவிஞர் டென்னிஸ் அவர்களின் ஆர்வந்தானே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது.

காது கேட்காத இயல்பு கொண்ட ஒருவர் நம் காதுகளுக்கு இனிய இசை வழங்கினார். ஒரு மனிதனின் இசை ஆர்வம் தன் இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெறமுடிந்தது என்றால் அது மைக்கேல் #பீத்தாவோன் என்ற இசை அறிஞரின் ஆர்வம் என்பதில் சந்தேகம் என்ன?!

பார்க்கத்தான் கண்கள், ஆனால் அதன நோக்கமிழந்த கண்களுடனும் கேட்காத காதுகளுடனும் ஒருவர் பிறந்தார். பின் பார்வையற்றமனித இனத்திற்கே கண்களாக மாறிப்போன ஹெலன் ஹெல்லரின் ஆர்வம் தான் அவரது தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றிபெறவைத்தது என்பதில் ஆர்வத்தின் அவசியம் தெளிவாகிறது.

படிக்கவே தெரியாத ஒரு நடிகர் பக்கம் பக்கமாக வசனங்களை தனக்கென்ற தனிப் பானியில் உச்சரித்தப் பேசி இன்றுங்கூட எத்தனை நடிகர்களும் மற்றவர்களும் அவரை பின்பற்றி தொழில்புரிகிறார்கள் என்றால் அது நடிகவேல் எம்.ஆர். ராதா தன் நடிப்பின்பால் இருந்த ஆர்வம் தானே.

நண்பர்களே, இப்படி நிறைய உதாரணங்கள் இந்த உலகில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆர்வத்தின் சக்தியை திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு. ஏ.ஆர். ரஹ்மான் என நம் கண்முன் நிதர்சனமாக காணமுடியும்.

ஒரு சுயசோதனை : நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பவரா?

1.எதற்கெடுத்தாலும் வேண்டாம் (வேண்டாம் வேண்டாம் என்பதல்ல) என்று சொல்லுபவரா?

2. ஏதாவது, எப்போதாவது, எப்படியாவது போன்றவார்த்தைகளை அதிக அளவில் பயன் படுத்துபவரா?

‘ஆம்’ என்பது உங்களது பதிலாக இருக்கிறது என்றால் ஆர்வமின்மை உங்களை தாக்குகிறது அல்லது தாக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே மேற்கண்ட வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்து ஒன்றை குறிப்பிட்டு அது வேண்டாம் இது வேண்டாம் என்றோ ஒரு குறிப்பிடும் நேரத்தை குறிப்பிட்டு சொல்லி பழகியோ இந்த வழியில்/ வகையில் என்பது போன்ற வார்த்தை களை மாற்றாக பயன்படுத்தினால் மனதில் ஆர்வம் தொடங்கும். இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆக மொத்தத்தில் எல்லா வெற்றிகளும் ஆர்வத்தில்தான் ஆரம்பிக்கின்றன என்கிறபோது அந்த ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் நாம் ஏன் நம் வெற்றியை ஆரம்பிக்கக்கூடாது? ஆர்வத்துடன் ஆரம்பிப்போம்

போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங்


அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அதனால் ஒரு பைத்தியக்காரனால் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே போன்று அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர்தான் மார்டின் லூதர் கிங்.

இவர் 1929-ல் பிறந்தார்.

1954-ல் ‘அலபாமா’ என்ற ஊரில் மதபோதகரானார்.

இங்குதான் எளிய மக்களோடும் கருப்பர் இன மக்களோடும் பழகுகின்ற வாய்ப்பை மாட்டின் லூதர் கிங் பெற்றார்.

அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கருப்பு இன மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

பேருந்துகளிலும், ரயில்களிலும் நீக்ரோ மக்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நீக்ரோக்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை.

கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் நீக்ரோக்களுக்குச் சம உரிமை மறுக்கப்பட்டது.

தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.

அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட நீக்ரோக்கள் முடிவு செய்தனர். அதற்கான தலைவரை அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர். அந்தப் போராட்ட எழுச்சிக்கு மார்டின் லூதர் கிங் தலைமை ஏற்றார்.

அலபாமாவில் உள்ள மாண்ட்கோமரி என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கருப்புப் பெண்மணி ஒருத்தி பஸ்ஸில் நீக்ரோக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார மறுத்தாள்.

“வெள்ளையரோடுதான் நான் உட்காருவேன்..இனிமேலும் எங்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று பிடிவாதமாகப் போராடினாள். அதனால் பஸ்ஸில் சலசலப்பு ஏற்பட்டது.

அவளுக்கு எதிராக பல குரல்களும், ஆதரவாக சில குரல்களும் அங்கே ஒலித்தன. இறுதியில் காவல்துறை அதிகாரிகள் வந்ததும், கருப்பு பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோர் அமைதியாகிவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண் தன் நிலையிலிருந்து மாறவில்லை. காவல்துறை அதிகாரிகளுடனும் வாதாடினாள். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார முடியாது என்று திடமாக மறுத்தாள். அதனால் அவளைக் கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

இந்தச் செய்தி அலபாம்ப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இந்தக் கொடுமைக்கு எதிராக மார்டின் லூதர் கிங் கருப்பர் இன மக்களைத் திரட்டினார். எந்தப் பேருந்தும் செல்ல முடியாத அளவிற்கு மார்டின் லூதர் கிங்கும், கருப்பர் இன மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இறுதியில் பேருந்தில் ஒதுக்கி வைக்கும் சட்டம் நீக்கப்பட்டது. சம உரிமைக்கான போராட்டம் வெற்றி கண்டது.

இந்தப் போராட்டம் அமெரிக்காவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் பரவியது.

1955-ல் மார்டின் லூதர் கிங் சம உரிமை கேட்டுப் போராடியது. அமெரிக்காவிலிருந்த கருப்பர் இன மக்களுக்கு ஒன்றுபட்டுப் போராட வழி வகுத்தது.

காந்தியடிகளின் போராட்ட வழிமுறைகள் மார்ட்டின் லூதர் கிங்கை பாதித்திருந்தது. அதனால், வன்முறையின்றி அமைதியான வழிமுறைகளில் தமது போராட்டங்களை நடத்தி வந்தார் மார்டின்.

உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பரவியது.

1964-ல் அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு கொடுக்கப்பட்டது.

நீக்ரோ மக்களிடத்தில் மார்டின் லூதர் கிங்கின் செல்வாக்கு அதிகரித்தது.

கருப்பு இன மக்கள் ‘கருப்பு இன மக்களின் காந்தி’ என மார்டின் லூதர்கிங்கை அழைத்தனர்.

அமெரிக்காவின் எந்தப் பகுதியில் கருப்பர் இன மக்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டாலும், அங்கு மார்டின் தமது அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.

வெள்ளையர் மீது பகைமை பாராட்டாமலும், அதே நேரத்தில் கருப்பர் இன மக்களின் நியாயமான போராட்டங்களை விட்டுக் கொடுக்காமலும் மார்ட்டின் லூதர் கிங் போராடினார்.

மாநாடு, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என ஓயாது உழைத்து வந்த மார்டின் லூதர் கிங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கொலைக்காரன் சுட்டுக் கொன்றான்

மனிதர்களை உங்கள் செல்வாக்குக்கு உரியவராக மாற்றும் கலை


நாம் செய்ய விரும்புவதை மற்றவர்கள் செய்ய வேண்டுமெனில், முதலில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் கண்டறிய வேண்டும். அவர்கள் எதற்குக் கட்டுப்படுபவர்கள் என்பதை அறிந்தால், அவர்களை கட்டுப்படுத்துவதும் சுலபமாகி விடும்.
நாம் ஒவொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள், வெவ்வேறு பொருட்களை விரும்புகின்றவர்கள். ஒவ்வொன்றிற்கும் வேறு வேறு அளவு முக்கியத்துவம் தருபவர்கள். எனவே மற்றவர்களும், நாம் நினைப் பதையே, விரும்புவதையே, நினைப்பார்கள், விரும்பு வார்கள் என்று கற்பனை செய்து தவறு செய்து விடாதீர் கள். முதலில் அவர்கள் எதைத் தேடிக் கொண்டுள்ளனர், என்ன விரும்புகின்றனர் என்பதை அறியவும்.

நீங்கள் அவர்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதைப் பேசினால் அவர்களை உங்கள் விருப்பப்படி இயக்கலாம்.

நீங்கள் அவர்கள் விரும்புவதை எவ்வாறு பெறலாம் என்பதை, அவர்களின் விருப்பத்தை நீங்களும் விரும்புவதாகக் காட்டி அவர்களைச் செய்ய வைக்கலாம்.
இது மற்றவர்களின் மீது செல்வாக்குச் செலுத்த சிறந்த வழியாகும். சரியான இலக்கை உங்களது பேச்சால் அடைய, முதலில் இலக்கு எது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் உங்களின் தொழிற்சாலையில் பணிபுரிய ஒரு சிறந்த பொறியாளரைப் பார்த்துப் பேசுவதாக இருந்தால், அந்தப் பொறியாளருக்கு ஏற்கனவே, பல தொழிற்சாலைகள் அழைப்பு விடுத்திருந்தால் அதில் உங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
இங்கு நீங்கள் முதலில் அறிய வேண்டியது, எந்த வகையான பணியை, சம்பளத்தை, தொழிற்சாலையை அவர் விரும்கின்றார் என்பதாகும். அவர் முன் பணம் பெறும் வசதியை விரும்புகின்றார் என்றால், அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டும். அவர் எவ்வளவு எதிர்பார்க் கின்றார். நீங்கள் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதுதான் உங்களின் உரை யாடலாக இருக்க வேண்டும்.

அவர் பணி உத்தரவாதம் குறித்து அதிகக் கவனம் செலுத்துபவராக இருந்தால், நீங்கள் உத்தரவாதம் குறித்துப் பேச வேண்டும். அவர் தொடர்ந்து பகுதி நேரமாகப் படிக்க விரும்புகின்றார் என்றால் அதைப்பற்றிப் பேசவும்.

இதன் சுருக்கம் அவர் என்ன விரும்பு கிறார் என்பதை அறிந்து அவர் விரும்பு வதை அடைய, நீங்கள் விரும்பு வதை உங்களிடம் பணியாற்றும் அவர் செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பதுதான்.

இதுவே நீங்கள் வேலை தேடி ஒரு தொழிற்சாலைக்கு செல்வதாக இருந்தால், நீங்கள் அங்கு என்ன பணிகள் உள்ளன, அதன் பொறுப்புகள், கடமைகள் என்ன என்பதை முதலில் அறிந்து, அதற்கு ஏற்ப அதனை நீங்கள் எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக அவர்களின் வாடிக்கையாளர்களைத் தொலைபேசி மூலம் கையாள வேண்டி இருப்பின், அதை உங்களால் செய்ய முடியும், அதற்கான அனுபவம் உண்டு என்பதைத் தெரிவிக்க வேண்டும். எனவே அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்கள் மொழியில் பேச வேண்டும்.

எதிரில் பேசுகின்றவர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை அவர்களைக் கேட்பதன் மூலமாகவும், அவர் பேச்சைக் கவனிப்பதன் மூலமாகவும், அவர்களின் அசைவுகளைப் பார்ப்பதன் மூலமாகவும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு எடுக்கும் முயற்சி மிக முக்கியமானதாகும்.

எண்ணங்கள்


மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார். 1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை. இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களினதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.

1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).

2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.

3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.
இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.

பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம். 1. உணர்வு உந்தும் இயல்பு (id) 2. நான் என்னும் முனைப்பு (Ego) 3. அதியுயர் மனக் கூறு (Super Ego)

1. உணர்வு உந்தும் இயல்பு (id)

இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன. ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் 'உணவினையும்') வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்புடன்' (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.

2. நான் என்னும் முனைப்பு (Ego)

உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.

3. 'அதியுயர் மனக் கூறு' (Super Ego)

உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது 'நான் என்னும் முனைப்'பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் 'அதியுயர் மனக்கூற்றின்' (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்'வதியுயர் மனக்கூறான'து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.

மனித ஆளுமை....

ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.

இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை 'மனச் சக்தி ' என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார். அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும். ம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும்
.

தியானம்! நான் யார்? என்பதை அறிவதற்கு.....


தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில்
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.

மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?


நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்


நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

உய்வு


காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.

'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' 

என்று தன் பெருமையை பறைசாற்றியது.

பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.

'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.

கொஞ்ச நேரத்தில்

ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.
உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.

காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..

"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்.!!
!"

முகப்புத்தக விருப்பு