உய்வு


காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.

'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' 

என்று தன் பெருமையை பறைசாற்றியது.

பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.

'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.

கொஞ்ச நேரத்தில்

ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.
உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.

காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..

"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்.!!
!"
0 Responses

முகப்புத்தக விருப்பு