காதல் கவிதைகள்


1.என்னை நினைவுபடுத்தும் ஒரு பொருளை
உனக்கு பரிசளிக்க நினைத்தேன்
என்னையே தந்தாலும்
அது சாத்தியம் இல்லை அன்பே..

2.காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால்....

3.உச்சரிக்கப்படாத வார்த்தைக்குள்
ஒளிந்து கிடக்கிறது காதல்....

4.என்ன வேண்டும் சொல் வாங்கித்தருகிறேன்
என்னை விற்றாவது...

5.நீ பார்த்த பார்வையில்
பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்
எரிந்து கொண்டே இருப்பேன்......
திரும்பி நீ வந்து
அணைக்கும் வரை

6.தேவையான பல விடயங்களை
மறந்து போகிறேன்
நான்......
உனது நினைவுகளை தவிர.......

7.எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்து விட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.
கவனித்துக்கொள் அன்பே !
அவை உன்னுடைய
காற்செருப்புகள் அல்ல......
கால்கள்



2 Responses
  1. Change Life Says:
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  2. Loga Says:

    naan ungal kavithigalai padithen nandraga ullathu


முகப்புத்தக விருப்பு