பாய்ச்சல்

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு கோடரியும்,கயிறும் விறகு வெட்டிக்குக்குப்பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.


காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களை தன் அலகால் கொத்திவிட்டுப்பறந்து போனது.


"இந்த மரங்கொத்தியைப்பார்த்தாயா? நான்கு மரங்களையும் மாறி மாறித்தன் அலகால் வெட்டியது--ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்தமுடிந்ததா? என்று கயிற்றைப்பார்த்து கேட்டது கோடரி.


"மரங்கொத்தியால் அது முடியாது என்றது கயிறு."
ஏன் அப்படிச்சொல்கிறாய்??


கயிறு சொன்னது:-
                                  "நாலு மரத்தையும் வெட்டுகிறவன் 
                                 ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"
0 Responses

முகப்புத்தக விருப்பு