சொரணை



நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களை எல்லாம் தன் முள்ளினால் குத்திப்புண்ணாக்கி கொண்டிருந்தது.


"மனிதர்களின் காலைக்குத்தி அவர்களுக்கு சினத்தை உண்டாக்குகிறாயே--பார்......பார்....அவர்கள் என்றோ ஒரு நாள் வேரோடு உன்னைப்பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய் புதைத்து விடப்போகிறார்கள்"  என்றது அருகம்புல்.


நெருஞ்சி சூடானது.
"என்னைக்காலால் மிதித்து வதைக்கிறவர்களை எல்லாம் நான் தாங்கிக்கொள்ள வேண்டுமாக்கும்......"


நெருஞ்சி சொன்னது:--
                                                "வதைபடுவதை விட 
                                                 புதை படுவது மேல்"
0 Responses

முகப்புத்தக விருப்பு